Nandriyaal Paadiduvaen - நன்றியால் பாடிடுவேன் | Anita Kingsly - Christking - Lyrics

Nandriyaal Paadiduvaen - நன்றியால் பாடிடுவேன் | Anita Kingsly


நன்றியால் பாடிடுவேன்
நாள்தோறும் பாடிடுவேன்-2
நல்லவர் என் வாழ்வில்
செய்தவைகளை எண்ணி
என்றென்றும் பாடிடுவேன்-2

1.கடந்திட்ட நாட்களில் உம் கரமே
என்னை கிருபையால் நடத்தியதே
கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது
கர்த்தாவே சுமந்திட்டீரே

களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி

2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது
உருக்கமாய் இரங்கினீரே
சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது
புது வழி திறந்திட்டீரே

ஆயிரம் நாவினால் பாடினாலும்
உம் அன்பிற்கு ஈடாகாதே-2-நன்றி

3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரே
என்றென்றும் பாடிடுவேன்
ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
அவர் செய்த நன்மைகட்காய்

ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி
நின் பாதம் வந்திடுவேன்-2-நன்றி

English


Nandriyaal Paadiduvaen - நன்றியால் பாடிடுவேன் | Anita Kingsly Nandriyaal Paadiduvaen - நன்றியால் பாடிடுவேன் | Anita Kingsly Reviewed by Christking on September 18, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.