Vazhve Neerthanaiya - வாழ்வே நீர் தானையா - Christking - Lyrics

Vazhve Neerthanaiya - வாழ்வே நீர் தானையா

வாழ்வே நீர் தானையா
என் இயேசுவே என் ஜீவனே
என் ஜீவனின் பெலனும் ஆனவர்
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே
நீர் போதுமே என் வாழ்விலே
வாழ்வே நீர்தானையா

நீர் மாத்ரம் இல்லையென்றால்
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்
நிற்பதுமே நிலைப்பதுமே
கிருபையினால் தான் வாழ்கின்றேனே

நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே

மாறிப்போகும் உலகினிலே
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா
கிருபையின் மேலே கிருபையை தந்து
நிர்மூலமாகாமல் காத்தீரையா
Vazhve Neerthanaiya - வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya - வாழ்வே நீர் தானையா Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.