Vaanor Poovor Kondada - வானோர் பூவோர் கொண்டாட - Christking - Lyrics

Vaanor Poovor Kondada - வானோர் பூவோர் கொண்டாட

வானோர் பூவோர் கொண்டாட
மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே

தீனதயாளன் திருமறைநூலன்
திரிபுவனங்களாள் செங்கோலன்
ஞானசு சீலன் நரரனுகூலன்
நடுவுடவே வருபூபாலன்

அலகையை ஜெயித்தார் அருள்மறை முடித்தார்
அருலமலர்க்கா காவலை யழித்தார்
நிலைதிரை கிழித்தார் தடைச்சுவரிடித்தார்
நேராய்த் தரிசனந்தர விடுத்தார்

செத்தோ ருயிர்த்தார் திருநகர் பூத்தார்
தேடற் கரியதோர் காட்சிவைத்தார்
மற்றோர் பார்த்தார் மலைவுகள் தீர்த்தார்
மரித்தோர் முதற்பலனாய்ச் செழித்தார்

அடியவர் கண்டார் ஆர்துயர் விண்டார்
அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்
மடமையகன்றார் மயக்கமே கொன்றார்
வானானந்தமே மனங்கொண்டார்

மகதலனாளு மதி சூசன்னாளும்
மயங்கியழுத யோ வன்னாளும்
மகவிருவர் தருசா லொமித்தாயும்
மரை மலரடிதொழு தேத்தினரே

எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா
இலதுபதின் மருக்குமே காட்சி
நன் மனதுடனே பதினொருவருக்கும்
நடுவகத்தே வருமாசூட்சி

மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்
மகத்துவத்தே தரிசன மளித்தார்
பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும்
பிரத்தியேகத்தில் தரிசித்தன்ரே

கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்
காட்சி மலையஞ் நூறுபேர் பார்த்தார்
உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்
ஒலிவை மலைமேல் திரள்பேர் பார்த்தார்.
Vaanor Poovor Kondada - வானோர் பூவோர் கொண்டாட Vaanor Poovor Kondada - வானோர் பூவோர் கொண்டாட Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.