Vaanamum Boomiyum Vagithiduntheva - வானமும் பூமியும் வகித்திடுந்தேவே! - Christking - Lyrics

Vaanamum Boomiyum Vagithiduntheva - வானமும் பூமியும் வகித்திடுந்தேவே!

வானமும் பூமியும் வகித்திடுந்தேவே!
வளம்நிறை ஆண்டவரே! தேவரீர்
ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை
ஈந்ததற்காய்த் தோத்ரம்!

பாவம்நிறைந்தோர், பாத்திமற்றோர்,
கோவத்துக்கேயுரியவர் வறியர்
ஆயினர் எமக்கிவ்வறுப்பை யளித்த
ஆண்டவரே, தோத்ரம்

வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை
வருடநாற்பது காத்தீர்!- அந்த
வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய
வானவரே, தோத்ரம்

ஐந்தப்பங்கெண்டையாயிரம்பேரை
அமர்த்திப் போஷித்தீர்,-ஐயா!
போந்த எம்பசியும் புறமுறச்செய்தீர்,
புண்ணியரே, தோத்ரம்

பெரிய உம்நாமம் பேருலகோங்க்க,
வறியவர் மிடியகல,-இவ்வீவை
அறிவுடன் காத்தே அருகையாய் ஆளும்
நெறியெமக் கீந்தருள்வீர்

திருச்சபைப்பண்ணை திகழ்பயிர் நாங்கள்
தேவரீர் பயிர்க்காரர்,-திருவே
ஆவியின் மழையால் ஆக்கிடும்,எம்மை
அழகிய கதிர்மணியாய்!
Vaanamum Boomiyum Vagithiduntheva - வானமும் பூமியும் வகித்திடுந்தேவே! Vaanamum Boomiyum Vagithiduntheva - வானமும் பூமியும் வகித்திடுந்தேவே! Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.