Um Paatham Panidean - உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே - Christking - Lyrics

Um Paatham Panidean - உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் -ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

பரிசுத்தமே பரவசமே
பரனே சருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்

புது எண்ணையால் புது பெலத்தால்
புதிய கிருபை புதுகவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர்

நெருக்கத்திலே உம்மையழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசை கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னை தாங்குகின்றீர்

என் முன் செல்லும் உம் சமுகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே

என் இதய த்ய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்றும் கண்டிடுவேன்
Um Paatham Panidean - உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே Um Paatham Panidean - உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.