Kartharukul Kalikoornthu - கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் - Christking - Lyrics

Kartharukul Kalikoornthu - கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் (என்)
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே (என்)
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்

ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு

பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு எனவே

பயமும், படபடப்பும் ஓஞ்சு போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு -எனவே

நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு எனவே

நேசக்கொடி என்மேலே பறக்குதையா என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா

கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு - என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சு போச்சு
Kartharukul Kalikoornthu - கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் Kartharukul Kalikoornthu - கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.