Kartharai Naan Ekkalathilum - கர்த்தரை நான் எக்காலத்திலும் - Christking - Lyrics

Kartharai Naan Ekkalathilum - கர்த்தரை நான் எக்காலத்திலும்

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் என் வாழ்வினிலே - 2
எப்போதும் அவர் துதி
நிறைந்திருக்கும் என் நாவினிலே - 2

நித்தம் என் உள்ளம் கர்த்தருக்குள்ளே
இத்தரை மீதில் மேன்மை பாராட்டும் - 2
சிறுமைப்பட்டோர் அதைக் கேட்கின்ற நேரம்
பெருமிதம் கொள்வார் பேரின்பம் காண்பார்
என்னோடே மன்னவனை மகிமை படுத்துங்கள்
உயர்த்திடுங்கள் - 2

ஆண்டவர் அவரைத் தேடி நின்றேனே
வீண் பயம் நீங்க செவி கொடுத்தாரே - 2
வேண்டுதலோடு வேந்தனின் முகத்தை
காண்கின்ற வேளை திடன் அளித்தாரே - 2
நல்லவர் கர்த்தர் என்பதை நாளும்
ருசித்துக் களித்திடுங்கள் -2

சிங்கத்தின் சிசுக்கள் தங்களின் இரைக்காய்
தாழ்ச்சி அடைந்தே ஏங்கிடக்கூடும் - 2
துங்கவன் அவரை நம்பிடுவோர்க்கு குறைவின்றி
வாழ்வில் நன்மைகள் கூடும் - 2
காக்கும் நல் தேவனை நம்பிடுவேன்
பாக்யவானென வாழ்ந்திருப்பேன் - 2
Kartharai Naan Ekkalathilum - கர்த்தரை நான் எக்காலத்திலும் Kartharai Naan Ekkalathilum - கர்த்தரை நான் எக்காலத்திலும் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.