Kartharai Ekkalamum - கர்த்தரை எக்காலமும் - Christking - Lyrics

Kartharai Ekkalamum - கர்த்தரை எக்காலமும்

கர்த்தரை எக்காலமும்
ஸ்தோத்திரித்து பாடுவேன்
அவர் துதி வாயிலிருக்கும்

கர்த்தரை எக்காலமும்
ஸ்தோத்திரித்து பாடுவேன்
அவர் துதி என் வாயிலிருக்கும்

கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமா
மேன்மையினால் நிறைந்து நிற்குதே
கனம் மகிமை அவர்க்கு உரியதே

இந்த ஏழை அவரைக் கூப்பிட்டான்
இறங்கி வந்தே பதில் கொடுத்தாரே
இடுக்கண் எல்லாம் நீக்கி விட்டாரே

வாதை துன்பம் வந்த வேளையில்
பாதை காட்டி என்னைத் தேற்றினார்
வலக்கரத்தால் தாங்கிக் கொண்டாரே

என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்
என் தேவனிடத்திலேயே கெஞ்சினேன்
அவர் எனக்கு செவி கொடுத்தாரே
Kartharai Ekkalamum - கர்த்தரை எக்காலமும் Kartharai Ekkalamum - கர்த்தரை எக்காலமும் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.