Kangalai Yeredupen - கண்களை ஏறெடுபேன் - Christking - Lyrics

Kangalai Yeredupen - கண்களை ஏறெடுபேன்

கண்களை ஏறெடுபேன் - மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுபேன்.

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்.

காலைத்தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின்றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்.

பக்க நிழல் அவரே - எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டென்னை அக்காவல் புரியவே

எல்லாத் தீமைகட்கும் என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர்
Kangalai Yeredupen - கண்களை ஏறெடுபேன் Kangalai Yeredupen - கண்களை ஏறெடுபேன் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.