Kalvari Mamalai Mel - கல்வாரி மா மலைமேல் - Christking - Lyrics

Kalvari Mamalai Mel - கல்வாரி மா மலைமேல்

கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்

குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை

அஞ்சாதே என் மகனே மிங்கும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கென் இப்பாடு உனக்காகத் தானே
ஈனக்கோலமடைந்தேன்
உன்னை இரட்சித்தேன் என்றார்

கர்த்தரின் சத்தமதை சத்தியிம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே
Kalvari Mamalai Mel - கல்வாரி மா மலைமேல் Kalvari Mamalai Mel - கல்வாரி மா மலைமேல் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.