Kai Thatti Paadi Magilnthiruppom - கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம் - Christking - Lyrics

Kai Thatti Paadi Magilnthiruppom - கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்

கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமுகத்தில் களிகூறுவோம்

களிகூறுவோம் களிகூறுவோம்
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கவலைகள் மறந்து களிகூறுவோம்

நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம் என்றார்

நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
ஜீவனுள்ள நாட்களேல்லாம்

அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்
ஆலோசனை அவர் தருவார்

ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
அவர் நம்மை விடுவிப்பாரே

வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்

பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்
வலக்கரம் தாங்கும் என்றார்

உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்
அவர் உன்னை மறப்பதில்லை
Kai Thatti Paadi Magilnthiruppom - கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம் Kai Thatti Paadi Magilnthiruppom - கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.