Iradsanyam Magimai - இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை - Christking - Lyrics

Iradsanyam Magimai - இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை

இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவா
ஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா

பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்

சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணிபோல காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

சாலோமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

மரணத்தை வெண்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா
Iradsanyam Magimai - இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை Iradsanyam Magimai - இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.