Inba Yesuvin Inaiyilla - இன்ப இயேசுவின் இணையில்லா - Christking - Lyrics

Inba Yesuvin Inaiyilla - இன்ப இயேசுவின் இணையில்லா

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்

நித்தியமான பர்வதமே
உந்தனில் நிலைத்திருப்பேன்
நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
நித்தம் நடத்திகிறீர் - என்னையும்
உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்

பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
ஆழ்ந்து நான் மாள்கையிலே
பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
பாரில் பரிசுத்தராகுதற்காய் - மிக
பரலோக நன்மைகளால் நிறைந்தீர்

மானானது நீரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போல் - என்
ஆத்துமா உம்பொன் முகம் காணவே
வாஞ்சித்து கதறிடுதே
வானிலும் இந்தப் பூமிலும் நீர் - என்
வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே

ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
அன்பரை உளம் கனிந்தே
அற்புத ஜெயம் ஈந்தீரே
அளவில்லாத ஜீவனை அளித்தே
அல்லேலூயா துதி கன மகிமை - உம்
நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்
Inba Yesuvin Inaiyilla - இன்ப இயேசுவின் இணையில்லா Inba Yesuvin Inaiyilla - இன்ப இயேசுவின் இணையில்லா Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.