Evare Perumaan - இவரே பெருமான் மற்றப் - Christking - Lyrics

Evare Perumaan - இவரே பெருமான் மற்றப்

இவரே பெருமான் மற்றப்
பேர் அலவே பூமான் - இவரே பெருமான்

கவலைக் கிடங்கொடுத் தறியார் வேறு
பவவினை யாதுமே தெரியார் இப்
புவனமீது நமக்குரியார்

குருடர்களுக் குதவும் விழியாம் பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் தெய்வம்
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்

பலபிணி தீர்க்கும் பரிகாரி சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி

அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்

அலகைதனை ஜெயித்த வீரன் பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் விண்
ணுலகு வாழ் தேவ குமாரன்

பொன்னுலகந் தனில்வாழ் யோகன் அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன்
Evare Perumaan - இவரே பெருமான் மற்றப் Evare Perumaan - இவரே பெருமான் மற்றப் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.