Enthan Aathma Nesare - என்தன் ஆத்ம நேசரே - Christking - Lyrics

Enthan Aathma Nesare - என்தன் ஆத்ம நேசரே

என்தன் ஆத்ம நேசரே,
வெள்ளம் போன்ற துன்பத்தில்,
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்
தஞ்சம் தந்து, இயேசுவே
திவ்விய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே
மோட்ச வீட்டில் சேருமேன்

வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் அறியேன்
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்கு மேன்
நீரே என்தன் நம்பிக்கை,
நீர் சகாயம் செய்குவீர்;
ஏதுமற்ற ஏழையை
செட்டையாலே மூடுவீர்

குறை யாவும் நீக்கிட
நாதா, நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்;
நான் அசுத்த பாவிதான்
நீரோ தூயர் தூயரே
நான் அநீதி கேடுள்ளான்
நீர் நிறைந்த நித்தியரே

பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள்பாயச் செய்குவீர்
ஜீவ ஊற்றாம் இயேசுவே
என்தன் தாகம் தீருமேன்
ஸ்வாமீ, என்றும் என்னிலே
நீர் சுரந்து ஊறுமேன்.
Enthan Aathma Nesare - என்தன் ஆத்ம நேசரே Enthan Aathma Nesare - என்தன் ஆத்ம நேசரே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.