Antho Kalvariyil - அந்தோ கல்வாரியில் - Christking - Lyrics

Antho Kalvariyil - அந்தோ கல்வாரியில்

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்

1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே – அந்தோ

2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே – அந்தோ

3. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே – அந்தோ

4. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் – அந்தோ
Antho Kalvariyil - அந்தோ கல்வாரியில் Antho Kalvariyil - அந்தோ கல்வாரியில் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.