Yesuvae Ennai Neer - Lyrics

Album : Aasaiyellam Neeare
Song: Yesuvae Ennai Neer Lyrics,
Tune by: Ps. Lawrence Manoj Kumar
Music: Stephen Sanders
இயேசுவே என்னை நீர் முழுமையாய் அறிவீர்
என் ஜீவன் நாட்கள் உம் கையில்
எனக்காக யாவையும் செய்பவரே
இம்மட்டும் நன்மையே செய்தீர்
என் எண்ணங்களெல்லாமே தெரியும் உமக்கு
என் ஏக்கங்களெல்லாமே புரியும்
தெரிந்தவரே புரிந்தவரே
என் ஏக்கங்கள் நிறைவேற்றுவீர்
கண்ணீர் துடைத்து கரம் பற்றி நடத்தி
கைவிடாது அணைத்தென்னைக் காத்தீர்
உம் ஆறுதல்கள் தேற்றுதல்கள்
எந்தனை சூழச் செய்தீர்
புரியாத சூழல் புரிந்திடா மனிதர்
என் மனம் உடைத்திட்ட போது
உம் வார்த்தை ஒன்றே உயிர்ப்பித்ததே
துவண்ட என் ஆத்துமாவை
தனியாக நின்று அநாதையாய் உணர்ந்து
கதறிய கசப்பான வேளை
உம் பிரசன்னம் தந்தீர் துணையாய் நின்றீர்
அன்பினால் அரவணைத்தீர்
Yesuvae Ennai Neer - Lyrics
Reviewed by Christking
on
February 22, 2018
Rating:
