Siluvaiyin Nizhalil Anudhinam Adiyaan : Lyrics - Christking - Lyrics

Siluvaiyin Nizhalil Anudhinam Adiyaan : Lyrics


சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாறிடுவேன் - ஆ.. ஆ..
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்

1. பாவ பார சுமையதால் சோர்ந்து
தளர்ந்த என் ஜீவியமே - ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்

2. எவ்விதக் கொடிய இடறுக்கும் அஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக்கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய் சொன்னார்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலும் இனிய வேதம்
தருமெனக்கானந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

Songs Description :
Song : Siluviyin Nilailil Anudhaniyam Adiyan
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Siluvaiyin Nizhalil Anudhinam Adiyaan : Lyrics Siluvaiyin Nizhalil Anudhinam Adiyaan : Lyrics Reviewed by Christking on December 02, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.