Atiyil Etenil Atamukkevalai : Lyrics - Christking - Lyrics

Atiyil Etenil Atamukkevalai : Lyrics

ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கேவாளை
அருளிச் செய்தீரே
அவ்விதமாகவே அவ்விருபேரையும்
இணைத்தருள்வீரே

1. மங்களமாய் திருமறையைத் தொடங்கி
மங்களமாய் முடித்தீர் - மங்கள
மா மணவாளனாய் மைந்தரை
மாநிலத்தில் விடுத்தீர்

2. ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக்
கருள் புரிந்தீரே - அங்ஙனமே இந்த
மங்களம் செழிக்க ஆசியருள்வீரே

3. கானாவூர் கலியாணம் கண்டு களித்த எம்
கர்த்தரே வந்திடுவீர் - காசினி மீதிவர்
நேசமாய் வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்

4. இன்பமும் துன்பமும் இம்மணமக்கள்
தாம் இசைந்து வாழ்ந்திடவே
அன்பர் உம் பாதம் ஆதாரம் என்றும்மை
அணுகச் செய்திடுவீர்

Songs Description :
Song : Atiyil Etenil Atamukkevalai
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Atiyil Etenil Atamukkevalai : Lyrics Atiyil Etenil Atamukkevalai : Lyrics Reviewed by Christking on October 01, 2016 Rating: 5
Powered by Blogger.