kasandha Mara Madhuramaagum : Lyrics - Christking - Lyrics

kasandha Mara Madhuramaagum : Lyrics

கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாக வாழ்க்கை மாறும்
கண்ணீரோடே விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய்- 2
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே நீ காண்பதில்லை
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை, தூங்கவில்லை

1.தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
வெள்ளம் போன்ற சத்துரு வந்தால்
ஆவியால் கொடி ஏற்றிடுவார் - இன்று

2.வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார்
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை நிறுத்திடுவார் - இன்று

3.சோர்ந்து போன மகனே உனக்கு
சத்துவத்தை அளித்திடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார்- இன்று

Songs Description :
Song : kasandha Mara Madhuramaagum
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
kasandha Mara Madhuramaagum : Lyrics kasandha Mara Madhuramaagum : Lyrics Reviewed by Christking on September 28, 2016 Rating: 5
Powered by Blogger.