Mangala Geethangal : Lyrics

மங்கள கீதங்கள் பாடிடுவோம்
மணவாளன் இயேசு மனமகிழ
கரை திறை, நீக்கி திருச்சபையாக்கி
கர்த்தனர் கற்புள்ள கன்னிகையாய்
கோத்திரமே! யூதா கூட்டமே
தோத்திரமே! துதி சாற்றிடுவோம்
புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே
புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம்
இராஜா குமாரத்தி ஸ்தானத்திலே
இராஜாதி ராஜன் இயேசுவோடே
இன, ஜன நாடு, தகப்பனின் வீடு
இன்பம் மறந்து சென்றிடுவோம் – கோத்திரமே
சித்திரை தையலுடை அணிந்தே
சிறந்த உள்ளான மகிமையிலே
பழுதொன்றுமில்லா பரிசுத்தமான
பாவைகளாகப் பறந்திடுவோம் – கோத்திரமே
ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே
அவர் மணவாட்டி ஆக்கினாரே
விருந்தரை நேச கோடி ஒளி வீச
வீற்றிருப்போம் சிங்காசனத்தில் – கோத்திரமே
தந்தத்தினால் செய்த மாளிகையில்
தயாபரன் ஏசு புறப்படுவார்
மகிழ் கமழ வீச மகத்துவ நேசர்
மன்னன் மணாளன் வந்திடுவார் – கோத்திரமே
Mangala Geethangal : Lyrics
Reviewed by Christking
on
July 10, 2016
Rating:
