Enna Vanthalum : Lyrics

என்ன வந்தாலும் நம்பிடுவேனே எது நடந்தாலும் பற்றிக்கொள்வேனே
யார் கை விட்டாலும் பின் செல்லுவேன் உம்மை பின் செல்லுவேன்
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே
1. துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
கண்ணீரின் மத்தியில் கடந்தாலும்
மரண இருளின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
2. வியாதியின் மத்தியில் மரித்தாலும்
பாடுகள் என்னை நெருக்கினாலும்
திகையாதே கலங்காதே என்று சொன்னீரே
என்னையும் நடத்திடுமே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
3. சோதனை என்னை சூழ்ந்தாலும் வேதனை என்னை நெருக்கினாலும்
சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி
தூக்கி சுமப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
4. நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும்
நம்பினோர் என்னை கை விட்டாலும்
முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன் என்று சொன்னவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
Enna Vanthalum : Lyrics
Reviewed by Christking
on
July 25, 2016
Rating:
