Sollal Aguma - சொல்லால் ஆகுமா : Lyrics - Christking - Lyrics

Sollal Aguma - சொல்லால் ஆகுமா : Lyrics

Sollal Aguma

சொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா
என் இயேசு ராஜன் புகளைச் சொன்னால் உலகம் தாங்குமா
முக்கோடி எழுத்தாலும் தக்கி முக்கி எழுதினாலும்
மன்னவன் புகழ் தனையே எழுதிட முடியுமா

1. மரித்தவன் வீட்டை மிதித்த தேவன் நீத்த உயிரை உயிர்த்து தந்தார்
கதறின குருடனின் கண்களைத் திறந்து வாழ்வை ஒளி மயமாக்கின தேவன்

2. கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும் யாரையும் வெறுத்து தள்ளாத தேவன்
வாடி நின்றிடும் மக்களின் குரலுக்கு வார்த்தையை அனுப்பி சுகம் தர வல்லவர்

Worship Songs Lyrics,Moses Rajasekar
Sollal Aguma - சொல்லால் ஆகுமா : Lyrics Sollal Aguma - சொல்லால் ஆகுமா : Lyrics Reviewed by Christking on May 15, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.