Aatkonda Deivam – ஆட்கொண்ட தெய்வம் - Christking - Lyrics

Aatkonda Deivam – ஆட்கொண்ட தெய்வம்



ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்

2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்

3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு

4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே

5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே

6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே





Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aatkonda Deivam – ஆட்கொண்ட தெய்வம் Aatkonda Deivam – ஆட்கொண்ட தெய்வம் Reviewed by Christchoir on August 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.