Ennavale jeevan viduththiro swamy / என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ - Christking - Lyrics

Ennavale jeevan viduththiro swamy / என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ



என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ
இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ

பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே
பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா
பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை
மீண்டனுக்ரகமிட நெறி கொண்டதோ

கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம் மெய்ப்பூங்
காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம் வேர்த்து
வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம் யாரால்
விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்
எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே
எனால் உமக்கென்ன லாபம் யேசு
மனா பரப்ரம திருவுளமோ இது

சிலுவை மரத்தில் கைகால் நீட்டி தேவரீர்
திருவிலாவைத் துளைக்க ஈட்டி காயம்
வலிய அன்பின் கடைக்கண் காட்டி இன்னம்
வரவழைக்கிறீர் தயை பாராட்டி
விலைகொடுத்தெனைக் கூட்டி மிக்க சலாக்யம் சூட்டி
மீண்டவாறிது மிக்க விசாலமே
ஆண்டவா அது பக்கிஷ நேசமே





Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Good Friday Songs
Ennavale jeevan viduththiro swamy / என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ Ennavale jeevan viduththiro swamy / என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ Reviewed by Christchoir on July 04, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.