Pesu Sabaiye Pesu - Tamil Christian Songs Lyrics

பேசு சபையே பேசு (4)
இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) --- பேசு
நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்
தசைகளும் புதிதாகத் தோன்றும்
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) --- பேசு
மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2) அதனால் --- பேசு
ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் --- இது உலர்ந்த
ஜீவனை பேசு, இரட்சிப்பை பேசு
சுவாசத்தை பேசு, அற்புதத்தை பேசு (2)
சபையே நீ எழும்பிடு, காற்றே நீ வீசிடு
போற்று சபையே போற்று - இயேசுவை
போற்று சபையே போற்று --- பேசு
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Pesu Sabaiye Pesu - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 11, 2015
Rating:
