Nambikkai Nangooram / நம்பிக்கை நங்கூரம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Nambikkai Nangooram / நம்பிக்கை நங்கூரம் - Tamil Christian Songs Lyrics



நம்பிக்கை நங்கூரம், நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே - பரம
பரிசுத்த தேவனை, பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம் (2)

நம்பிக்கை நீர் தானே, நங்கூரம் நீர் தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே! (2) நீர்தானே

1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம், ஆயிரம்
பார்வோன்கள் வந்தாலும், எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை

2. கன்மலையைப் பிளந்தவரைத் துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம், பஞ்சம்
பட்டினியே வந்தாலும், வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை

3. கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம், மரண
இருளுள்ள பள்ளத்தாக்கின், சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Nambikkai Nangooram / நம்பிக்கை நங்கூரம் - Tamil Christian Songs Lyrics Nambikkai Nangooram / நம்பிக்கை நங்கூரம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

1 comment:

Powered by Blogger.