Nirbandhama Paaviyai / நிர்பந்தமான பாவியாய் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Nirbandhama Paaviyai / நிர்பந்தமான பாவியாய் - Tamil Christian Songs Lyrics

1. நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், கர்த்தரே;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

2. ஆ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்;
ஆ ஸ்வாமீ, துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்,
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே, என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

4. என் நெஞ்சின் திகில் தணித்து,
என்மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Nirbandhama Paaviyai / நிர்பந்தமான பாவியாய் - Tamil Christian Songs Lyrics Nirbandhama Paaviyai / நிர்பந்தமான பாவியாய் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.