Arulin Oliyi Kandaar / அருளின் ஒளியைக் கண்டார் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Arulin Oliyi Kandaar / அருளின் ஒளியைக் கண்டார் - Tamil Christian Songs Lyrics


1. அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே;
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச.

2. ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்.

3. கர்த்தன், பிறந்த பாலகன்,
கர்த்தத்துவமுள்ளோன்;
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்.

4. ஆலோசனையின் கர்த்தனே,
சாலவே வல்லோனே,
பூலோக சமாதானமே,
மேலோக தந்தையே.

5. தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியால்
ஏவி பலம் செய்வார்.

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Arulin Oliyi Kandaar / அருளின் ஒளியைக் கண்டார் - Tamil Christian Songs Lyrics Arulin Oliyi Kandaar / அருளின் ஒளியைக் கண்டார் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.