Neerindri valvedu / நீரின்றி வாழ்வேது இறைவா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Neerindri valvedu / நீரின்றி வாழ்வேது இறைவா - Tamil Christian Songs Lyrics



    நீரின்றி வாழ்வேது இறைவா - உம்
    நினைவின்றி மகிழ்வேது தேவா (2)
    உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் (2)
    உம் இல்லத்தில் நான் வாழும் ஒரு நாளே போதும்

    - நீரின்றி வாழ்வேது

    பல கோடி வார்த்தைகள் நான் கேட்டபோதும் - இயேசுவே
    நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் (2)
    ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே - உம்
    வார்த்தையில் உண்டு அற்புதமே

    - நீரின்றி வாழ்வேது

    கல்லுக்கு தேரையை வைத்தவர் நீர்
    அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர் (2)
    உமையன்றி அணுவேதும் அசையாதய்யா
    உம் துணையின்றி உயிர் வாழ முடியாதய்யா

    - நீரின்றி வாழ்வேது
    எத்தனை நன்மைகள் செய்தீரய்யா - அதில்
    எதற்கென்று நன்றிசொல்லி துதிப்பேனய்யா (2)
    அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்
    ஆயிரம் ஆண்டுகள் போதாதய்யா

    - நீரின்றி வாழ்வேது

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Neerindri valvedu / நீரின்றி வாழ்வேது இறைவா - Tamil Christian Songs Lyrics Neerindri valvedu / நீரின்றி வாழ்வேது இறைவா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 11, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.