Neerindri valvedu / நீரின்றி வாழ்வேது இறைவா - Tamil Christian Songs Lyrics
நீரின்றி வாழ்வேது இறைவா - உம்
நினைவின்றி மகிழ்வேது தேவா (2)
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் (2)
உம் இல்லத்தில் நான் வாழும் ஒரு நாளே போதும்
- நீரின்றி வாழ்வேது
பல கோடி வார்த்தைகள் நான் கேட்டபோதும் - இயேசுவே
நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் (2)
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே - உம்
வார்த்தையில் உண்டு அற்புதமே
- நீரின்றி வாழ்வேது
கல்லுக்கு தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர் (2)
உமையன்றி அணுவேதும் அசையாதய்யா
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதய்யா
- நீரின்றி வாழ்வேது
எத்தனை நன்மைகள் செய்தீரய்யா - அதில்
எதற்கென்று நன்றிசொல்லி துதிப்பேனய்யா (2)
அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதய்யா
- நீரின்றி வாழ்வேது
Neerindri valvedu / நீரின்றி வாழ்வேது இறைவா - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 11, 2015
Rating:
No comments: